Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி விழாவில் கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கருத்தரங்கில் பள்ளியின் தலைவர் முகமது இக்பால் மாணவமணிகளுக்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கக் கூடாது அதனால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டனர்.
சுதந்திரத்திற்காக பாடுப்பட்டவர்களை நினைவு கூர்ந்தானர் பள்ளியின் தாளாளர் கமாலுதீன் அவர்கள் துணைத்தலைவர் முகமது அன்சாரி, முதல்வர் சையத் அப்துல் சுபஹான் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச்சங்க உறுப்பினர்களும், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவ-மாணவிகள் காந்தி வேடம் காமராஜர் வேடம் இந்திரா காந்தி வேடம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.